மலைக்கிராமங்களில் எமனாகும் பிளாஸ்டிக் பயன்பாடு
பிளாஸ்டிக்
தாண்டிக்குடி, ஆடலூர்,
பன்றிமலை, KC பட்டி, பாச்சலூர் மற்றும் பெரும்பாறை போன்ற மலை கிராமங்கள்
சுற்றுலா தலமாக மாறாமல் இயற்கையின் சிறப்புகள் கொண்ட கிராமங்களாக
இருபது
எனக்கு மிக சந்தோசமாக இருந்தாலும் சரியான விழிப்புணர்வு இல்லாததால் இந்த
கிராமங்கள் பிளாஸ்டிக் பயன்பட்டால் நாசமாகி கொண்டு வருவது இந்த கிராமத்தில்
பிறந்து வளர்ந்த எங்களைப்போன்றவர்களுக்கு மிக வருத்தமாக உள்ளது. நாகரிக
வளர்ச்சியின் உச்சத்தில் மலைப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக்
பயன்பாடு. இந்த பிளாஸ்டிக் மற்றும் பல கழிவு பொருட்களை மறுசுழற்ச்சி
செய்யாமல் கிராமங்களில் அப்படியே விடுவதாலும் இயற்கையை அழித்துகொண்டு
இருக்கிறோம்.
பிளாஸ்டிக் பல வடிவங்களில் வீடுகளிலும் மக்களின்
அன்றாட பயன்படுத்தும் பொருட்களிலும் 100% அக்கிரமைத்துள்ளது. வாழும் இடத்தை அதிகம் ஆக்கிரமித்திருக்கும் பொருட்கள் என்னென்ன என்று ஒரு
நிமிடம் சிந்தித்துப்பாரத்தால் பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் முதல்
பாத்ரூம் மக் வரை சகலமும் பிளாஸ்டிக் ஆகிவிட்டன. மளிகை முதல், உணவு,
மருந்துகள் என அனைத்தும் பிளாஸ்டிக்கில்தான் கிடைக்கின்றன. முன்பு
சாப்பிட வாழை இலை, தையல் இலை, உலோகத் தட்டுகள் பயன்படுத்தினோம். இன்று
கண்களைக் கவரும் நிறங்களிலும், வடிவங்களிலும் நம் வீட்டில் பிளாஸ்டிக்
தட்டுகளும், கிளாஸ்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மலிவான விலையில்
பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பதால், நம் பசுமை வீடுகள் பிளாஸ்டிக் வீடுகளாக
மாறிவிட்டன. சமையல் அறையில் நம் பாரம்பரிய அஞ்சறைப் பெட்டிகூட இப்போது
பிளாஸ்டிக் பெட்டிதான். இது பார்க்க அழகாகத் தெரியலாம், ஆனால் உடலுக்குக்
கேடு விளைவிப்பதில் முதல்இடம். அதேபோல கடைக்கு காய்கறி, மளிகை சாமான்
வாங்கச் செல்ல முன்பெல்லாம் துணிப்பை கொண்டுசெல்வோம். இன்று துணிப்பை
என்பது கேலிக்குரியதாக மாறிவிட்டது. பிளாஸ்டிக்
பயன்படுத்துவதால் இப்போது என்ன ஆகிவிடப்போகிறது, பின்னாட்களில், பிரச்னை
வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ எனும் அசட்டுத் தைரியத்தில் நாம்
பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால், நோய்களின் ஆதிக்கம்தான்
அதிகரிக்கும்.
சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டு, கிண்ணத்தில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பி.பி.ஏ (BPA) என்ற ரசாயனம், உடலுக்குள் சென்று, ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், சிறுவயதிலேயே பருவம் எய்துதல், விந்தணுக்கள் குறைதல், இதய நோய், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், குழந்தையின்மை, கருச்சிதைவு, டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் 92 சதவிகிதத்தினருக்கு அவர்கள் ரத்தத்தில் பி.பி.ஏ ரசாயனம் இருந்ததாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Centre for disease control and prevention) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல, பச்சிளம் குழந்தைகள்கூட இதனால், பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டு, கிண்ணத்தில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பி.பி.ஏ (BPA) என்ற ரசாயனம், உடலுக்குள் சென்று, ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், சிறுவயதிலேயே பருவம் எய்துதல், விந்தணுக்கள் குறைதல், இதய நோய், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், குழந்தையின்மை, கருச்சிதைவு, டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் 92 சதவிகிதத்தினருக்கு அவர்கள் ரத்தத்தில் பி.பி.ஏ ரசாயனம் இருந்ததாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Centre for disease control and prevention) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல, பச்சிளம் குழந்தைகள்கூட இதனால், பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
மலை கிராமங்களை பொறுத்தவரை வெளிப்புறங்களில் உணவு தேடி
அலைகின்ற வீட்டு கால்நடைகளும், காட்டு வன விலங்குகளும் இந்த பிளாஸ்டிக்
பொருட்களை தின்று உயிர் இழக்கின்றன. சில
வருடங்களுக்கு முன்பு ஆடலூரில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது குதிரை
பிளாஸ்டிக் பைகளை உண்டதால் இறந்தது குறிப்பிடத்தக்கது, இது போன்று பல
குதிரைகளும், பசுமாடுகளும் மற்றும் ஆடுகளும் மலைக்கிராமங்களில் இறந்தது
வருத்தப்படவைக்கிறது. வீடு மற்றும் கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக்
பொருட்களால் வீட்டு வளர்ப்பு விலங்குகள் இறக்கின்றன. குறிப்பாக கடைகைகளில் அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளது.
மது அருந்துபவர்கள் ஊர்களுக்கு வெளியில் காட்டுப்பகுதிகளில் பிளாஸ்டிக்
பொருட்களை போடுவதாழும், விவசாய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம்
பயன்படுத்துவதாலும் காட்டு வன விலங்குகள் மற்றும் பறவைகள் பல உயிர் இழக்கின்றன மேலும்
விவசாய நிலமும் பிளாட்டிக் போன்ற நஞ்சு கலந்து மலட்டு தன்மையை பெறுகின்றன, நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்படும் அவல நிலை இருந்து வருகின்றது. கொடைக்கானல்
போன்ற சுற்றுலா தளங்களில் நிலத்தடி நீர் குறைந்ததற்கு முக்கிய காரணமாக
இந்த பிளாஸ்டிக் கழிவு தான் கரணம்.
பிளாஸ்டிக் தவிர்க்க... மாற்று வழிகள்...
- பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்தினாலும், இரண்டு - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும் போது, பிரஷ்ஷில் இருந்து அதிகமான ரசாயனங்கள் வெளியாகும்.
- சோப் பாக்ஸ், குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட், மக் போன்றவற்றை அலுமினியமாகவோ, ஸ்டீலாகவோ மாற்றலாம். இது துருப்பிடிக்காது. நீண்ட நாட்களுக்குப் பயன்படும்.
- தண்ணீர் குடிக்க, பித்தளை, ஸ்டீல் பாட்டிலைப் பயன்படுத்தலாம். மதிய உணவை எடுத்துச் செல்வதற்கு பிளாஸ்டிக் அல்லாத ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் நல்லது.
- தட்டு, டம்ளர், கிண்ணம் போன்றவற்றை ஸ்டீல் அல்லது பித்தளையில் வாங்கிப் பயன்படுத்தலாம். பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பவை.
- குழந்தைகளுக்கு பேபி பாட்டிலோ, பிளாஸ்டிக் அல்லது ரப்பர் நிப்பிலோ கொடுப்பதை தவிருங்கள். குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலில் மிக மோசமான பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது என்கின்றன ஆய்வுகள். உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றை ஸ்பூன், பாலாடை, ஸ்டீல் கிண்ணம், ஸ்டீல் டம்ளரில் கொடுக்கலாம்.
- மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்தப்படுவது உயர்தரமான பிளாஸ்டிக் என்றாலும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
- ஹோட்டலில் உணவு வாங்க, வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டல் உரிமையாளரை வாழை இலையில்் பேக் செய்து தரச் சொல்லிக் கேட்கலாம். வாழை இலை இரண்டு முதல் 10 நாட்களில் மக்கிவிடும்.
- இளநீர், பழச்சாறு குடிக்கும்போது ஸ்ட்ரா தவிர்க்கலாம்.
- நான்-ஸ்டிக் பாத்திரங்களை சூடாக்கும்போது மோசமான கெமிக்கல்களை வெளியிடும். மண் பாண்டங்கள், எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறுங்கள்.
- கடைக்குச் செல்கையில், துணிப்பைகளை வைத்திருங்கள்.
- மூன்று ஆர் (R) - களை (Reduce, Reuse, Recycle) எப்போதும் கடைப்பிடிப்போம். அதாவது, பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைப்போம். தேவை எனில், ஏற்கனவே இருக்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம்.
மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடியது, எளிதில்
அப்புறப்படுத்தக்கூடியது என்பதால், பிளாஸ்டிக்கின் மோசமான பின்விளைவுகளைப்
பற்றி யாரும் பெரிதாக தெரிந்திருப்பதும் இல்லை. இன்னும் சில நாட்களில் "ஆடலூர்,
பன்றிமலை, KC பட்டி, பாச்சலூர், தாண்டிக்குடி மற்றும் பெரும்பாறை" போன்ற
ஊர்களில் பிளாஸ்டிக் பற்றிய விழுப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களிடம் அதிகமா நடத்த உள்ளோம்.
இதற்க்கு இதை படித்து கொண்டு இருக்கும் நீங்கள் முழு ஆதரவு தர வேண்டும்.
முதல் செயலக நீங்கள் பிளாஸ்டிக் பொருட்களை இந்த நெடிகளில் இருந்து குறைவாக
பயன்படுத்தினாலும் மற்றும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து
நடத்தினாலும் இந்த இயற்கை அழகை 100% பாதுகாக்க பெறுதவியாக இருக்கும்.